சாந்தாங்காடு ஊராட்சியில் கட்டணமில்லா தையல் பயிற்சியினை பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி நடத்துகின்றது.
இந்த பயிற்சி 22.01.2021 அன்று தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் எஸ்.டி.எஸ் செல்வம் தலைமை தாங்க, சாந்தாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் ரா.பச்சமுத்து, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏ.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பயிற்சியில் சாந்தாங்காடு அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மகளிர்கள் பயனடையலாம்.